×

திப்பம்பட்டி கூட்ரோடில் போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை

அரூர், ஜன.3: அரூர் அருகே திப்பம்பட்டி கூட்ரோட்டில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல் அமைக்க ேவண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திப்பம்பட்டி கூட்ரோடு உள்ளது. இங்கு நான்கு வழிகளில் சாலை பிரிகிறது. அங்கிருந்து தர்மபுரி, சென்னை, திருப்பத்தூர், அரூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு என நான்கு புறமும் சாலை பிரிந்து செல்கிறது. நான்கு புறங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகிறது. பேருந்துகளை விட டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக காரிமங்கலம் பகுதியில் பெங்களூரு- சேலம் தங்க நாற்கர சாலையிலிருந்து பிரிந்து அரூர் வழியாக சேலம் செல்வதற்காக சரக்கு வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, சீரான போக்குவரத்துக்கு வசதியாக இப்பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thippampatti Gutrod ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா